Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Friday, January 31, 2014

வரகு கத்தரிக்காய் சாதம் (வாங்கி பாத்)


வரகு கத்தரிக்காய் சாதம் (வாங்கி பாத்)

தேவையான பொருட்கள்:
  1. வரகு அரிசி – 1 குவளை (100 gms)
  2. தண்ணீர் – 2 1/4 குவளை
  3. சீரகம் – 1/4 தேக்கரண்டி
  4. முந்திரி பருப்பு - 8 துண்டுகள்
  5. பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
  6. கத்தரிக்காய் – 150 கிராம் (நீளவாக்கில் நறுக்கியது)
  7. கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
  8. நல்லெண்ணை – 3 தேக்கரண்டி
  9. இந்துப்பு – சுவைக்கேற்ப

வாங்கி பாத் மசாலா பொடி தயாரிக்க:
  1. நிலக்கடலை – 2 தேக்கரண்டி
  2. கடலை பருப்பு – 1 1/2 தேக்கரண்டி
  3. உளுந்து – 1 தேக்கரண்டி
  4. கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
  5. காய்ந்த மிளகாய் – 2 
  6. துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
  7. பெருங்காயம் – 2 சிட்டிகைகள்
  8. மஞ்சள் தூள் – 2 சிட்டிகைகள்
செய்முறை:
  1. சமைப்பதற்கு முன்னர் வரகரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். 
  2. குக்கரில்அரிசியை போட்டு நீர் ஊற்றி, அதில் சிறிது இந்துப்பு மற்றும் சில துளிகள் எண்ணை சேர்த்து வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைக்கவும். குக்கர் ஆவி போன பிறகு, மூடியைத் திறந்து முள்கரண்டியால் சாதத்தை சற்று கிளறி விடவும். இந்த சாதத்தை தனியே வைக்கவும்.
  3. இதற்கிடையில் ஒரு வாணலியில், 'வாங்கி பாத் மசாலா பொடி தயாரிக்க' என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக அதே வரிசையில் போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, அந்தப் பொடியை தனியே வைக்கவும்
  4. வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணை ஊற்றி, அதில் நறுக்கிய கத்தரிக்காயை, சற்று மென்மையாகும் வரை வதக்கி, தனியே வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீர் தெளிக்கவும்,
  5. இன்னொரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணை ஊற்றி, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே எண்ணையில் சீரகம், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானபிறகு, வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து கிளறவும். பின் வாங்கி பாத் மசாலாவை கலந்து 2 நிமிடம் வதக்கவும். வரகரிசி சாதத்தை போட்டு மசாலா நன்றாக கலக்கும்படி கிளறவும். இறுதியில் வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பை சேர்த்து கிளறவும். சுவைக்கேற்ப இந்துப்பு சேர்க்கவும். ஏதாவது ஒரு வகை ராய்தாவுடன் பரிமாறவும்.
குறிப்பு:
  • இந்த செய்முறையை வலைதளத்தில் கற்றேன். அதில் கூறப்பட்டுள்ள வெள்ளை அரிசிக்கு மாற்றாக, வரகு சிறுதானியத்தை பயன்படுத்தியுள்ளேன். இதேபோல் சாமை மற்றும் குதிரைவாலி அரிசி வகைகளையும் பயன்படுத்தலாம்.
  • சாதம் சற்று காரமாக இருக்க விரும்பினால், காய்ந்த மிளகாய் மற்றும் மிளகு இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும்,
  • உங்களுக்கு விருப்பமானால் மட்டுமே வெங்காயம் சேர்க்கவும்.

No comments :

Post a Comment