Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Friday, January 31, 2014

வரகு சாம்பார் சாதம் (பிசிபேளே பாத்)

வரகு சாம்பார் சாதம் (பிசிபேளே பாத்)
வரகு சாம்பார் சாதம் (பிசிபேளே பாத்)
சோளம் சாம்பார் சாதம் (பிசிபேளே பாத்)
சோளம் சாம்பார் சாதம் (பிசிபேளே பாத்)

தேவையான பொருட்கள்:
  1. வரகு அரிசி – 1 குவளை (100 gms)
  2. துவரம் பருப்பு – 1/4 குவளை (30 gms)
  3. தண்ணீர் – 3 குவளை
  4. காய்கறிகள் – ஏதாவது 4 அல்லது 5 வகை (மொத்தம் 200 gms)
  5. தக்காளி – 2 அல்லது 3 (நடுத்தர அளவு)
  6. சிறிய வெங்காயம் – 10 துண்டுகள்
  7. நல்லெண்ணை – 1 தேக்கரண்டி
  8. கடுகு – 1/4 தேக்கரண்டி
  9. சீரகம் – 1/4 தேக்கரண்டி
  10. முந்திரி பருப்பு – 7 அல்லது 8 துண்டுகள்
  11. கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
  12. பச்சை மிளகாய் – 1
  13. பெருங்காயம் – 2 சிட்டிகைகள்
  14. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  15. இந்துப்பு – சுவைக்கேற்ப

பிசிபேளே பாத் மசாலா தயாரிக்க:
  1. கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
  2. உளுந்து – 1 தேக்கரண்டி
  3. காய்ந்த மிளகாய் – 2 
  4. வெந்தயம் – ¼  தேக்கரண்டி
  5. கடுகு - ¼ தேக்கரண்டி
  6. பட்டை – 1 துண்டு (1/2 இன்ச் நீளமுள்ளது)
  7. கிராம்பு - 3
  8. சீரகம் – 1/2 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
  10. துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
  1. ஒரு வாணலியில் 'பிசிபேளே பாத் மசாலா பொடி தயாரிக்க' என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக அதே வரிசையில் போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, அந்தப் பொடியை தனியே வைக்கவும்.
  2. சமைப்பதற்கு முன்னர் வரகரிசியையும், துவரம் பருப்பையும் தனித்தனியே 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. குக்கரில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். முந்திரிப் பருப்பு போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் சிறிய (சாம்பார்) வெங்காயம், முழு பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். தக்காளியுடன், மஞ்சள் பொடி, பெருங்காயம் மற்றும் சிறிது இந்துப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  4. இப்போது அனைத்து காய்கறிகள், வரகரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து நீரை ஊற்றி வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் காத்திருந்து, பின் அடுப்பை அணைக்கவும்.
  5. குக்கர் ஆவி போன பிறகு, மூடியைத் திறந்து பிசிபேளே பாத் மசாலா பொடியை சேர்த்துக் கலக்கவும். குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் வேக விடவும். பின் அடுப்பை அணைக்கவும்.
  6. சாதத்தின் மீது காராபூந்தி அல்லது உருளைக் கிழங்கு வருவல் சேர்த்து சாப்பிடவும்.
குறிப்பு:
  • இந்த செய்முறையை வலைதளத்தில் அறிந்து கொண்டேன். அதில் வழக்கமான அரிசிக்கு பதிலாக, சிறுதானியத்தை பயன்படுத்தி உள்ளேன். வரகுக்கு பதிலாக, குதிரைவாலி, திணை மற்றும் சாமை அரிசிகளையும் பயன்படுத்தலாம்.
  • பிசிபேளே பாத் மசாலா சேர்க்கும் முன்னர், சாதம் மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது வெந்நீர் ஊற்றி கிளறி, அடுப்பில் வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து மசாலா சேர்க்கவும்.
  • உங்களுக்கு விருப்பமான ஏதாவது 4 அல்லது 5 வகை காய்கறிகளை பயன்படுத்தலாம். ஆனால் அந்த காய் விரைவிலேயே குழையக் கூடிய தன்மை இல்லாததாக இருப்பது நல்லது. உதாரணம் -> பச்சை பட்டாணி, காலிஃப்ளவர், முதலியவை.

No comments :

Post a Comment