Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Sunday, February 12, 2017

வாழும் வனம்

வாழும் வனம்

ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இந்த வலைப்பதிவின் மூலம் எங்களது மகிழ்ச்சியை உங்களிடையேப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். புகழ்பெற்றக் கவிஞர் திரு.வைரமுத்து அவர்களின் 'மூன்றாம் உலகப்போர்' தொடர்கதையை ஆனந்த விகடன் இதழில் படிக்கத் தொடங்கியது முதல் எனக்கும் என் கணவருக்கும் இரசாயன உரங்கள் இடாத, இயற்கை வழி வேளாண்மை செய்ய வேண்டும் எனும் விதை மனதில் வேர் விட்டது. அதன் காரணமாகக் கடந்த ஐந்து வருடங்களாக விவசாயம் செய்வதற்கான நிலத்தைத் தேடிக் கொண்டிருந்தோம். இயற்கையின் ஆசிர்வாதத்தால், எங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இந்தத் தோட்டம் சமீபத்தில் எனது கணவரின் பூர்வீக ஊருக்கு அருகிலேயே கிடைத்து விட்டது. இத்தோட்டத்திற்கு ‘வாழும் வனம்’ என்று பெயரிட்டுள்ளோம். இவ்வனம் அமைந்துள்ள இடத்தின் வரைபடம் கீழேத் தரப்பட்டுள்ளது. வனத்தின் புகைப்படங்களை வரைபடத்தில் காணலாம்.


பல வருடங்களாக நிலம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, இந்தத் தோட்டத்தைக் கண்டுபிடித்து எங்களுக்குக் காண்பித்த எனது கணவரின் உடன்பிறந்த சகோதரர் திரு.கண்ணன் அவர்களுக்கும் மற்றும் உடன்பிறவா சகோதரர் திரு. அமுல்ராஜ் அவர்களுக்கும், மேலும் இந்தத் தோட்டத்தில் இத்தனை வருடங்களாக மரங்களை நட்டும் அவற்றை அதிக இரசாயனங்களைத் தெளிக்காமல் பராமரித்தும் வந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் இத்தருணத்தில் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் இன்று வரை ஊக்கமளித்து வரும் நலம் விரும்பிகளுக்கும் மிக்க நன்றி. அதுபோலவே இனிமேல் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும், ஒவ்வொரு முயற்சிக்கும் உங்களுடைய ஆதரவும், ஆசிகளும் தொடரவேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோளாகும்.

தற்பொழுது இந்தத் தோட்டத்தில் தென்னை, செடி முருங்கை, அகத்தி, பலா, மா, கொய்யா ஆகிய மரங்கள் பலன் தரக்கூடிய நிலையில் உள்ளன. இனி வரும் காலங்களில், இங்கு ஜப்பானைச் சார்ந்த ‘எதுவும் செய்யாத வேளாண்மை’ முறையைக் கற்றுத்தந்த முன்னோடி விவசாயியான காலம் சென்ற அய்யா திரு. மசானபு ஃபுகோகா மற்றும் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை உயிர்பெறச் செய்த காலம் சென்ற அய்யா திரு.நம்மாழ்வார் அவர்களின் அடிப்படைக் கருத்துக்களைப் பின்பற்றி, எங்களது தற்சார்பு வாழ்க்கைக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழவகைகளை உற்பத்தி செய்யவிருக்கின்றோம். ‘வாழும் வனம்’ எனும் பெயருக்கேற்றபடி, இத்தோட்டத்தில் அனைத்து வகையான தாவரங்களை இடம்பெறச்செய்து அதன் மூலம் மற்ற பறவைகளும், உயிரினங்களும் தாமாகவே இத்தோட்டத்தில் வந்து வாழ்வதற்கான பல்லுயிர் சூழலை ஏற்படுத்த விழைகின்றோம்.

மேலும், நஞ்சில்லாத விளைபொருட்களை எவ்வாறு முறைப்படி உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது என்று இயற்கை மருத்துவச் செம்மல் அய்யா திரு. ஜி. பாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து நாங்கள் கற்றறிந்த  ‘இயற்கை வாழ்வியல்’ முறைகளை, எங்களைப் போன்ற ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வது குறித்தத் தேடலில் இருக்கும் மற்ற அன்பர்களும், நண்பர்களும் எங்களுடன் வந்து சில நாட்கள் தங்கி, கற்றுக் கொள்வதற்கான தளமாகவும் இவ்வனத்தை அமைக்க உள்ளோம். அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறைவுற்ற பின்னர் அது குறித்தத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 

Living Forest

Living Forest

It’s been a while since we shared an update with you and through this post we would like to share our immense pleasure.  Ever since we started reading ‘Moonraam Ulagappor (Third World War)’ series by famous Tamil Poet Mr.Vairamuthu in Ananda Vikatan magazine, we got the quest for Natural Farming. For the past five years we had been searching for a land to practice it.  Recently, with nature’s blessings we got a farm near my husband’s native, meeting all our expectations.  We have named this farm as ‘Living Forest’ and its location map is given below. Map includes farm photos as well.


We take this moment to extend our heartfelt thanks to Mr.Kannan, my husband’s elder brother and Mr.Amulraj, our family friend who have helped us find this farm after several years of search.  We also thank all those people, who have planted and nurtured several trees with little to no chemical inputs.  We also thank all our well-wishers who have been a constant source of encouragement to our endeavors.  We expect your continued support and wishes for our future endeavors as well.

At present, this farm consists of Coconut, Dwarf Moringa, Sesbania, Jack fruit, Mango, Guava trees which are yielding. We are planning to practice, ‘Do Nothing Farming’ preached by Late.Mr.Masanabu Fukoka and ‘Natural Farming’ practices taught by Late.Mr.Nammalvar to nurture this farm.  We are looking at meeting our needs on Fruits, Greens and Vegetables to lead a sustainable living.  We are trying to bring biodiversity as the name ‘Living Forest’ depicts, by growing wide range of plants and trees, which would in turn attract and provide shelter to other living beings.

We are also planning to develop this forest as a platform to experience and practice ‘Life Natural’ practices which we learnt from Mr.G.Balakrishnan.  By practicing ‘Life Natural’ one would understand the proper way of consuming poison free natural produces leading to holistic health.  This platform will facilitate like-minded friends who are in search of health, to come and stay with us for few days and learn these practices.  We will keep you posted on further developments in future posts.

Friday, April 29, 2016

Barnyard millet Raw Mango Rice

Barnyard millet Raw Mango Rice
Barnyard millet Raw Mango Rice

Ingredients (for 2 persons):
  1. Barnyard millet – 1 cup (150 grams)
  2. Water – 2 1/4 cups
  3. Raw mango – 1 (150 grams grated)
  4. Mustard seeds - 1/4 teaspoon
  5. Urad dal - 1/2 teaspoon
  6. Bengal gram (Channa dal) – 1 teaspoon
  7. Ground nut - 2 teaspoons
  8. Dry red chilly - 1
  9. Asafoetida - 1 pinch
  10. Turmeric powder - 1 pinch
  11. Curry leaves – 2 springs
  12. Coriander (Cilantro) leaves – little quantity (chopped)
  13. Rock salt – as per taste

குதிரைவாலி மாங்காய் சாதம்

குதிரைவாலி மாங்காய் சாதம்
குதிரைவாலி மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்: (2 நபர்களுக்கு)
  1. குதிரைவாலி அரிசி – 1 குவளை (150 கிராம்)
  2. தண்ணீர் – 2 1/4 குவளை
  3. மாங்காய் - 1 (150 கிராம் துருவியது)
  4. கடுகு - 1/4 தேக்கரண்டி
  5. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  6. கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி
  7. நிலக்கடலை – 2 தேக்கரண்டி 
  8. பெருங்காயம் - 1 சிட்டிகை
  9. மஞ்சள் தூள்  - 1 சிட்டிகை
  10. காய்ந்த மிளகாய் - 1
  11. கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
  12. கொத்தமல்லி தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
  13. இந்துப்பு – சுவைக்கேற்ப


Wednesday, April 27, 2016

Pearl millet Tabbouleh (Salad)

Pearl millet Tabbouleh (Salad)
Pearl millet Tabbouleh (Salad)
Ingredients (for 2 people):
  1. Whole Pearl millet (Bajra) – 1 cup (200 grams)
  2. Big onion - 1 (medium size)
  3. Tomato – 1 (big size)
  4. Cilantro/ Coriander leaves – 1 cup
  5. Mint leaves – 1 or 2 tablespoons
  6. Spring onion – 3 tablespoons
  7. Pepper corn – 7 or 8 counts
  8. Rock salt – as per taste

கம்பு தபோலி (சாலட்)

கம்பு தபோலி (சாலட்)
கம்பு தபோலி (சாலட்)

தேவையான பொருட்கள் (2 நபருக்கு):

  1. முழு கம்பு – 1 குவளை (200 கிராம்)
  2. பெரிய வெங்காயம் – 1 (நடுத்தர அளவு)
  3. தக்காளி – 1 (பெரியது)
  4. கொத்தமல்லி – 1 குவளை 
  5. புதினா – 1 அல்லது 2 தேக்கரண்டி 
  6. வெங்காயத்தாள் (Spring Onion) – 3 தேக்கரண்டி 
  7. மிளகு – 7 அல்லது 8 எண்ணிக்கை
  8. இந்துப்பு - சுவைக்கேற்ப


Tuesday, December 8, 2015

Sharing our 2.5 years of experience in Life Natural


We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past few months on our health improvement, a few common questions we often face from the people around us, a few points we observed from the society and our views on those points, etc. But I was confused as I was not sure where to begin it from. Recently, we watched a Tamil TV show between doctors and public. Then I realized that this is the right time to write this post. 


Doctors' ignorance on Disease:

During that TV show (http://www.hotstar.com/1000072205 time: 38:00), one of the doctors said that diseases like Diabetics, Blood pressure, Cholesterol were quite natural among 30+ years male. We were shocked to hear that. Few years ago, the same modern medical science, classified these diseases for people above 60 years. Then it became diseases for 50 years. Again it became for the age group of 40 years. At present, they say that such diseases occur among 30+ years people and that too ‘it is natural’. This statement made it clear to us that even the doctors are living in ignorance. If this is the condition of the doctors, how will they be in a position to guide others to attain health? Even if we accept that such diseases are common, with the kind of growth what medical science has gone through all these years, appropriate medicines should have been made available to cure these diseases completely. But what is the reality? The age bar of the patients is decreasing and the number of the patients is increasing.